சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் 30 நாள் பரோல் விடுப்பில் விடுவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகன் தமிழ்க்கோவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ராபர்ட் பயஸ்க்கு உயர்நீதிமன்றம் விடுவிப்பு வழங்கியுள்ளது. 30 நாள் பரோல் விடுப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொடிவாக்கம் வீட்டுக்கு பயஸ் செல்கிறார்.